search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இந்தியாவுக்கு அணுகுண்டு தாக்குதல் மிரட்டல்- பாகிஸ்தான் பெண் அமைச்சர் பேச்சால் பரபரப்பு
    X

    இந்தியாவுக்கு அணுகுண்டு தாக்குதல் மிரட்டல்- பாகிஸ்தான் பெண் அமைச்சர் பேச்சால் பரபரப்பு

    • பாகிஸ்தான் மீது மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டுகளை கூறினால் பாகிஸ்தான் அமைதியாக கேட்டுக் கொண்டு இருக்காது.
    • தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவை விட பாகிஸ்தான் அதிகம் தியாகம் செய்துள்ளது.

    இந்திய பிரதமர் மோடி குறித்து பாகிஸ்தான் வெளி உறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ அவதூறு கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.

    இதற்கிடையே பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பூட்டோ கொடும்பாவிகளை எரித்தனர்.

    இந்தநிலையில் இந்தியாவுக்கு, பாகிஸ்தான் அணுகுண்டு தாக்குதல் மிரட்டல் விடுத்துள்ளது. பாகிஸ்தான் ஆளும் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த பெண் தலைவரும், அமைச்சருமான ஷாஜியா மாரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், அமைச்சர் பிலாவல் பூட்டோவுக்கு ஆதரவு தெரிவித்தார்.

    இதுதொடர்பாக ஷாஜியா மாரி கூறியதாவது:-

    பாகிஸ்தானிடம் அணுகுண்டு உள்ளது என்பதை இந்தியா மறந்துவிடக்கூடாது. எங்களது அணுசக்தி நிலை அமைதியாக இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல. தேவை ஏற்பட்டால் நாங்கள் பின்வாங்க மாட்டோம். எப்படி பதில் அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு தெரியும்.

    எங்களை அறைந்தால் நாடு பின்வாங்காது. பாகிஸ்தானும் சமமான தீவிரத்துடன் பதிலடி கொடுக்கும். இந்தியாவின் பிரதமர் நாட்டில் வெறுப்பை மட்டுமே பரப்புகிறார்.

    மோடி அரசாங்கம் சண்டையிட்டால் பிறகு அவருக்கு தக்க பதிலடி கிடைக்கும். பாகிஸ்தான் மீது மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டுகளை கூறினால் பாகிஸ்தான் அமைதியாக கேட்டுக் கொண்டு இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஷாஜியா மாரி தனது டுவிட்டர் பக்கத்தில், பாகிஸ்தான் பொறுப்புள்ள அணுசக்தி நாடு. இந்திய ஊடகங்களில் உள்ள சில கூறுகள் பீதியை உருவாக்க முயலுகின்றன.

    தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவை விட பாகிஸ்தான் அதிகம் தியாகம் செய்துள்ளது என்று கூறியுள்ளார்.

    Next Story
    ×